#Breaking: நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு..

 
rss


தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழ்நாடு முழுவதும் நாளை  நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.  இதற்காக, அந்தந்த மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில்,   அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணம் காட்டி  அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.   

Highcourt

அதன்படி ,  தமிழ்நாட்டில்  44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருந்தது.   இந்த 6 இடங்கள் தவிர, மேலும்  காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காத்திருக்க வேண்டும் என்றும்  உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

rss

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மைதானம் அல்லது உள்ளரங்குகளில்  பேரணி நடத்திக்கொள்ளலாம் என்கிற  சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. உயர்நீதிமன்றம் விதித்த 11 நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதை ஒட்டியே பேரணி  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்   ஆர் எஸ் எஸ் தரப்பில்  கூறப்படுகிறது.