#Breaking : அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரக்ஞானந்தா..

 
Praggnanandhaa

இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  

 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் நித்யானந்தாவின் பெயரை,  அர்ஜுனா விருதுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பானது பரிந்துரை செய்துள்ளது.    ஒன்றிய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுவிற்கு,  தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்யானந்தாவின் பெயர் அகில இந்திய கூட்டமைப்பு  பரிந்துரை செய்திருப்பது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது.   சமீபத்தில் நடைபெற்ற ஆசியா கான்டினேட்டர் செஸ் சாம்பியன் போட்டியில்,  பிரக்ஞானந்தா பட்டம் வென்றிருந்த  நிலையில்,  அவரது பெயர் தற்போது அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரக்ஞானந்தா..

சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, தனது பன்னிரண்டாவது வயதிலேயே சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். கடந்த 2018ம் ஆண்டுஅந்த சாதனையை  அவர் நிகழ்த்தியபோது அவர் பிறந்து 12 வருடங்கள் 10 மாதங்கள் 13 நாட்களே ஆகியிருந்தது.   இதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். தொடர்ந்து பல்வேறு செஸ் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ள பிரக்ஞானந்தா, செஸ் போட்டியில் உலக சம்பியனான கார்ல்சனை 2 முறை  தோற்கடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,...