#Breaking : ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் நோட்டீஸ்..

 
#Breaking : ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் நோட்டீஸ்..

தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒடுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

  2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்,  கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல் நாளன்று   நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய விவகாரம் தொடர்பாக,  காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் தான்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,   கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

சத்தியமூர்த்தி பவன் 


இந்த அசம்பாவிதங்களுக்கு ரூபி மனோகரன் தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு  நடவடிக்கை குழு தலைவர் கே. ஆர். ராமசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நவம்பர் 24ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமாரும் விளக்கம் அளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ரூபி மனோகரன்,  ரஞ்சன் குமார் இருவ்ருக்கும்  ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்