கள்ளக்குறிச்சி பாஜக துணை தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!!

 
tn

கள்ளக்குறிச்சி பாஜக துணை தலைவர் கட்சியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார்.

bjp

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 6ம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அப்போது முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள்  ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

Annamalai

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட துணை தலைவர் திரு. ஆரூர் ரவி அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்,  கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால்,  கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.  ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.