திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?- அண்ணாமலை
திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும்
திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என இருக்க வேண்டும், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என பேசியிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை.
திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் @arivalayam கட்சியினருக்கு @rajbhavan_tn அவர்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? (1/5)
— K.Annamalai (@annamalai_k) January 7, 2023
1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது. இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர்.வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.