ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கவனத்திற்கு.. போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

 
பேருந்து நடத்துனர்கள் டிக்கெட்


ஓட்டுநர், நடத்துனர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும்,  கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்  என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.    பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

 இதுகுறித்து  போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. எனவே, மா.போ.கழக அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கீழ்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

பேருந்து பயணம்

* மா.போ.கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி *நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் /சாலைகளில் பேருந்துகளை இயக்க கூடாது.

* அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கி செல்லுதல் வேண்டும்.

* மா.போ.கழக பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி /இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

* மா.போ.கழகத்தில், சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும்.

ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கவனத்திற்கு..   போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

* குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டங்களை வசூலித்தல் கூடாது. மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும்.

* ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக்கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும். மாறாக பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.

* பேருந்துகளின் சிறிய, பெரிய பழுதுகளை ஒவ்வொரு நாளும் இரவில் சரிசெய்து மறுநாள் காலையில் அதனதன் வழித்தடத்தில் அட்டவணைப்படி முறையாக இயக்கிடல் வேண்டும்.

ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கவனத்திற்கு..   போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

* கால் ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தினை எத்தகைய விபத்திலும் குறிப்பாக உயிரிழப்பு விபத்து ஏற்படாவண்ணம் தானியங்கி மூடு கதவினை ஒவ்வொரு நிறுத்தத்திலும் சரியாக திறந்து/மூடி பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்குதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை துணை மேலாளர்(பயிற்சி/பாதுகாப்பு) மற்றும் முதல்வர் பயிற்சி பள்ளி ஆகியோர் பயிற்சிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நன்கு விளக்கி கூறி கடைபிடிக்க செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் மண்டல மேலாளர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை ஓட்டுநர்/ நடத்துநர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் நன்கு விளக்கி கூறி மா.போ.கழகத்தின் பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயணச்சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாயினை பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும்  அறிவுறுத்தப்படுகிறது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.