பள்ளிகளில் கலை, பண்பாட்டு செயல்பாடு : சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா - பள்ளிக் கல்வித்துறை

 
 பள்ளிக் கல்வித்துறை


அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை மற்றும்  பண்பாட்டு செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரண்டு  பாடவேளைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச்செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்துல்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பள்ளி மாணவர்கள்

கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க,  பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என  பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும் என்றும்,  கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் அறிவித்துயுள்ளது.