அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி -இன்று தொடக்கம்

 
d

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி இன்று தொடங்குகிறது.   பள்ளிகள் அளவிலும் , வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் நடைபெறுகிறது. 

 தமிழ்நாட்டில் பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைக்க முடிவு . இதுவே கலைத்திருவிழாவின் நோக்கம் . அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகின்ற வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் ,மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட இருக்கின்றது .

gl

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை ,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டி அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகளில் இன்று முதல் தொடங்குகிறது .

பள்ளி அளவில் இன்று முதல் 28ஆம் தேதி வரையிலும் , வட்டார அளவில் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரையிலும்,   மாவட்ட அளவில் ஆறாம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும்,  மாநில அளவில் ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும் இந்த கலைத் திருவிழா போட்டி நடைபெற இருக்கிறது . இந்த போட்டியில் மாணவ மாணவிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.