காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வேலை நாளாக அறிவிப்பு..

 
school


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முழு வேலைநாளாக அறிவித்து மாவட்ட  நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

கடந்த நவம்பர் , டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்தது. இந்த சமயங்களில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

இதுகுறித்து  காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , “தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.