ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..

 
 ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் 3ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  தஞ்சாவூர் பெரிய கோவிலில்   ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழா  இன்று தொடங்கியுள்ளது.  இந்நிலையில், மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதை ஏற்று,   இந்த ஆண்டு முதல் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா  -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ள நிலையில் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து   தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், , “மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை பந்த் - அண்ணாமலை

அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக ஒரு கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம். அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் இதனை முதலமைச்சர் செயல்படுத்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிள்ளார்..