புத்தொழில் சூழமைவிற்கான "லீடர் " விருது - முதல்வர் வாழ்த்து!!

 
tn

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான "லீடர் " விருதினை காண்பித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதல்வரிடம்  வாழ்த்து பெற்றார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம்  இன்று  தலைமைச் செயலகத்தில்,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் , ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான "லீடர்" விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

mk Stalin biopic

புதுதில்லியில் 4.7.2022 அன்று ஒன்றிய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்தற்காக தமிழ்நாட்டிற்கு லீடர் விருது வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற நிலையில் இருந்து தற்போது “லீடர்” நிலைக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.

govt

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர்  வி.அருண்ராய் இ.ஆ.ப. தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய நில நிர்வாக ஆணையருமான எஸ். நாகராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரும், தற்போதைய செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியருமான  சஜீவனா, இ.ஆ.ப., தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.