தமிழகத்தையே உலுக்கி எடுத்த ஸ்ருதி வழக்கில் 8 பேரும் விடுதலை - மக்கள் கடும் அதிர்ச்சி

 
sஎ

சீயோன் தனியார் பள்ளி பள்ளியின் பேருந்து ஓட்டையில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிர் இழந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.   இந்த தீர்ப்பு கண்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 சென்னையில் சேலையூர் சீயோன் பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு  சுருதி என்கிற சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.    முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமி தினமும் பள்ளிப் பேருந்தில் சீயோன் பள்ளிக்கு சென்று வந்தார்.

 அப்படித்தான் 2012 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 25ஆம் தேதி அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.   அப்போது மாணவி சுருதி அமர்ந்து இருந்த இருக்கை ஆடி இருக்கிறது.   இதில் மாணவி தடுமாறி கீழே விழுந்து இருக்கிறார் .  அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சுருதி கீழே சாலையில் விழுந்தார்.   அதில் பேருந்தின் சக்கரம் சுருதியின் தலையில் ஏறியது .  அந்த சிறுமி மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

ப்

 இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி  எடுத்தது.  பள்ளி பேருந்து ஓட்டையால் சிறுமி பரிதாபமான உயிரிழந்த விவகாரம்  பெரிதாக வெடித்தது.   இதை அடுத்து பள்ளி தாளாளர் விஜயன்,  அவரது சகோதரர்கள் ரவி , பால்ராஜ் , பேருந்து ஓட்டுனர் சீமான்,  மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன்,  பேருந்து உரிமையாளர் யோகேஷ் , கிளீனர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்.

 செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது.   அரசு தரப்பில் 35 சாட்சிகளிடமும் பள்ளியின் தரப்பில் எட்டு சாட்சிகளிடமும் விசாரணை நடந்தது.  

 வழக்கில் அரசு சார்பில் 35 சாட்சிகள் அளிக்கப்பட்டாலும் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதால் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் நிரூபிக்க முடியாமல் போனது.   இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  

 குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி காயத்ரி.   தமிழகத்தையே உலுக்கி எடுத்த இந்த வழக்கில் அரசு சார்பில் குற்றவாளியாக சுமத்தப்பட்ட  எட்டு பேரும் விடுதலை ஆகி இருப்பது  பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.