நீலகிரி பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி!

 
tn

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இருக்கும் பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
tn

கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது.  முதுமலையிலும் இதுவரை 20க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளதால், யானைகள் காப்பகத்திற்கு பன்றிகள் வருவதை தடுக்க  பாரம்பரிய முறைப்படி துணிகளைக் கட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர். 

tn

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இருக்கும் பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்ததால், உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த சூழலில் பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.