கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!!

 
ttn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து,  வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. அத்துடன் பள்ளியில் நடைபெற்ற  கலவரம் தொடர்பாக  வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 tn

இதனிடையே மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  இவர்கள் ஐந்து பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து  சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மரண வழக்கில்,  நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.  கடந்த 29ஆம் தேதி இம்மனுவை விசாரித்த விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணை (ஆகஸ்ட் 1ம் தேதிக்கு) இன்று  ஒத்திவைத்தது.

tn
இந்நிலையில் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீன் கோரிய மனு  மீதான விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம். அத்துடன் கள்ளக்குறிச்சி வன்முறை விவகாரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 309 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் இன்று காணொளி மூலம் ஆஜர் படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், உறவினர்கள் கூடாதவாறு 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.