பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை..

 
உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம்

இந்தியாவில் பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த விதிமுறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு  வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாஸ்மதி அரிசி தான். இந்த வகை பாஸ்மதி அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகின்றன.  அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசியே  மட்டுமே ஒரிஜினல் பாஸ்மதி அரிசி.

உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம்

ஆனால், ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, செயற்கை மணம் செலுத்தப்பட்டு பிரியாணி அரிசி, பாஸ்மதி அரிசி என்று விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. செயற்கை மணம், செயற்கை நிறமூட்டி அதனை பாஸ்மதி அரிசி என விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஏனெனில்  பாஸ்மதி அரிசி பேக் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதன் விற்பனை பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக  ஆகஸ்ட் மாதம் முதல் இந்த தடை விதிக்கப்படுகிறது என உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் அறிவித்திருக்கிறது.