ராணி எலிசபெத் ஒரு அரசியாக வராமல் ஒரு தாயாக இந்தியா வந்தார் - கமல்ஹாசன் நெகிழ்ச்சி பேட்டி

 
kamal health

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒரு அரசியாக வராமல் ஒரு தாயாக இந்தியா வந்தார் என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார். ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். 

kamal with queen

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது: உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலக தலைவர் ராணி எலிசபெத். காலனி மனப்பான்மையில் இருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். மருதநாயகம் அவர்களை காலனிய ஆட்சி வருவதற்கும் முன்னாள் தூக்கில் இடப்பட்ட அதே தேதியில் இங்கு வந்தார். நாங்கள் பேசிய வசனங்கள் எல்லாம் காலனி ஆட்சிக்கு எதிரான வசனங்களை நாங்கள் இது தான் பேச போகிறோம் என்று தெரிந்தும் அவர் அங்கு வந்து அமர்ந்திருந்தார். ஒரு அரசியாக வராமல் ஒரு தாயாக இந்தியா வந்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. நானும் அங்கு சென்று பக்கிங்காம் மாளிகையில் அவரை சந்தித்தேன். புதிய உலகை அனுபவித்து நீண்ட நாட்கள் வாழ்ந்து உலகத் தலைவர்களில் ஒருவர், வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பார்க்காத உலக சரித்திரம் ஒன்றுமில்லை சொல்லுமளவிற்கு அனைத்து மாற்றத்தையும் பார்த்து அனுபவித்து அதற்கான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்லி மறைந்திருக்கிறார். இவ்வாறு கூறினார்.