தலை இல்லாத கட்சி அதிமுக....விரக்தியின் உச்சத்தில் இபிஎஸ் - டிடிவி தினகரன் விளாசல்!

 
ttv

அதிமுக கட்சி தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது: அமமுக கட்சி சுதந்திரமாக இயங்கக்கூடியது ஆகும். என்னிடம் எடப்பாடி பழனிச்சாமியிடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கிறீர்கள். அதிமுக கட்சி தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது. தலை இல்லாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் அம்மாவின் தொண்டரே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்.

நான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் கூறியது கிடையாது. திமுகவை வீழ்த்தவேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியாக ஒன்றுதிரள வேண்டும். அவ்வாறு ஒன்றுகூடி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றிபெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.