அதிமுக அலுவலக சாவி - ஈபிஎஸ் கேவியட் மனுதாக்கல்!!

 
edappadi palanisamy

அதிமுக அலுவலக சாவி வழக்கு விவகாரத்தில்  ஈபிஎஸ் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார். இதனிடையில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே அசம்பாவிகளை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  

ops eps

சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிடம் அதிமுக அலுவலக சாவி ஒப்படைக்க உத்தரவிட்டது.   சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

edappadi palanisamy

இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே  ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி  கேவியட் மனு தாக்கல் செய்தார். அதிமுக அலுவலக சாவி  எடப்பாடி பழனிசாமி வவசம் ஒப்படைக்க  உயர் நீதிமன்ற உத்தரவிட்டதிற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி கேவியட்  மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.