அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ் தரப்பு காரசார வாதம் - விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

 
supreme court

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில், நாளைக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்திற்கு வந்து எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ. பன்னீர் செல்வமும் இரு அணியாக பிரிந்தனர்.  இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார். அதிமுகவில் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இருந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் . இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகேஸ்வரி,  ரிஷிகேஷ்வராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

ops

இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.   மூன்று நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பு வாதங்கள் நடந்து வந்தன.  இதை எடுத்து வழக்கின் மறுவிசாரணை பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.  இன்றைய விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைத்தது. அந்த வாதங்கள் வறுமாறு:  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

eps

அதிமுக பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகள் குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும் பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது. ஜூலை 11 பொதுக்குழுவில் 2460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு இபி்எஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5 சதவீத ஆதரவு.

 இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.