மோடி எங்களை ஒன்றிணைய சொல்கிறார்; அவர் சொன்னால் கேட்கவேண்டும்- ஓபிஎஸ்

 
ops

வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்றும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். அந்த வகையில் இன்று புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு கோரினார்.

ops

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பேன் என்ற நிலைப்பாடோடு ஏசி சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வலுவான இயக்கமாக அதிமுகவை உருவாக்கி தந்துள்ளார்கள், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடு.

எங்களை சந்திக்கும் போதெல்லாம் அனைவரும் இணைய வேண்டும் என பிரதமர் கூறுவார்.பிரதமர் போன்ற நல்ல மனிதர் ஒன்றிணைய வேண்டும் என சொன்னால் கேட்க வேண்டும். அதிமுகவை இக்கட்டான சூழ்நிலைக்கு ஈபிஎஸ் தரப்பு தள்ளி விட்டார்கள். அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் ஓ.பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேட்டபோது எம்ஜிஆர் மாளிகை நோக்கி தான் எங்கள் கார் செல்லும் என்றேன். வேறு இடங்களுக்கு போகாது என சொல்லவே இல்லை” எனக் கூறினார்.