அமைச்சர் ரகுபதிக்கு சொந்தமான மருத்துவமனையில் இளம்பெண் மர்ம மரணம்!

 
Death

செங்கல்பட்டு அருகே தனியார்  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

death

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. அவரது கணவர் பெயர் ஜானகிராமன். திவ்யா இன்று காலை மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனமான (காப்பர் T) அகற்ற வந்த பொழுது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இன்று காலை 7.00 சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருத்துவ நிர்வாகம் காலை 11.00 மணியாகியும் அந்த பெண்ணை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மருத்துவர்கள் பரபரப்பாக செயல்பட்டு வந்ததால் உறவினர்களுக்கு அச்சம் அடைந்து சந்தேகப்பட்டனர். உறவினர்கள் சண்டைபோட்டதால் பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், இதனை கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மருத்துவமனை அமைச்சர் ரகுபதிக்கு சொந்தமானதாகும்.