வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

 
k

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.    காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 20ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் அந்தமான் கடல் பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

r

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது.  இந்த காற்றழுத்தத்தினால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து  கனமழை, அதிக கன மழை பெய்தது . டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது.

 மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிக கனமழை பெய்து உள்ளதால் அம்மாவட்டம் வெள்ளக்காடாக இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் . மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 இந்நிலையில் வங்கக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.  தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.   இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.   இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி, 20ம்தேதி, 21ம் தேதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.