#JUSTIN அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி - 15 மாவட்டங்களில் பணிகள் தொடக்கம்!!

 
tn

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

mk Stalin biopic

முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே  7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். ஊட்டச்சத்து குறைபாட்டை களைய  6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்;  1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.

tn

இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.அதன்படி 15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படுகிறது. படிப்படியாக இத்திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வருகிறது.