ஒரு வராத்தில் ரூ.8,15,900 அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

 
corporation

கடந்த ஒரு வாரத்தில் 3,131 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  ரூ.8,15,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்   28 வகையான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும்  மெரீனா கடற்கரையில் 01.09.2022 முதல் 14.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில்  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 12 கடை உரிமையாளர்களிடமிருந்து 11.5 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,900 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரீனா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.5,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா உள்ளிட்ட 3 கடற்கரைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 01.09.2022 முதல் 14.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 347 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 49 கடை உரிமையாளர்களிடமிருந்து 4.9 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,900  அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.9,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வராத்தில் ரூ.8,15,900 அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 07.09.2022 முதல் 13.09.2022 வரை ஒருவாரக் காலத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 6,787 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2,196 உரிமையாளர்களிடமிருந்து 3,131 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,15,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்றும்  மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.