5 முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துக்கே செக் வைத்த 8 வயது சிறுமிகள்

 
சிறுமிகள்

5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு செக்மேட் வைத்த எட்டு வயது இரட்டை சிறுமிகளின் கேள்வி இணையத்தில் வைரலாகிவருகிறது. 

மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியா தொடர் கலை கட்டி வருகின்றது மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் கேள்வி நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பானது கிடைக்கும். அந்த வகையில் நேற்று ஐந்து முறை உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்திடம் எட்டு வயது ஆன இரட்டை சிறுமிகள் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர். தற்பொழுது அந்த கேள்வியானது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

கேள்வி நேர தருணத்தின் போது, இரட்டை சிறுமிகளில் ஒருவர் காயின்களை எப்படி மறுபடியும் reset செய்வது என்று கேள்வி கேட்டு அதற்கு ஆனந்த் பதிலளிக்க தொடங்கிய போது, அந்த சிறுமி காயின்களை வைத்து எதிரணி வீரரை திசை திருப்புவது எப்படி? என்று கேள்வி எழுப்ப ஆனந்த் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் "i have no idea" என்று கூறி மகிழ்ச்சி சிரிப்பை வெளிப்படுத்தினார். 


தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இன்றைய தினத்திற்கான கேள்வி என்றும் பதிவிட்டுள்ளார். உலக சாம்பியனையே தங்களுடைய கேள்விகளால் திணற வைத்த இந்த இரட்டை சிறுமிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.