8 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

 
assembly

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிமைப் பொருள் துறை டிஜிபி சீமா அகர்வால் தீயணைப்புத் துறை டிஜிபியாக நியமனம். சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் துறை ஐஜியாக இருந்த ரூபேஷ்குமார் மீனா, அதே துறையின் டிஜிபியாக நியமனம். ஐபிஎஸ் அதிகாரி கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம், ஊழல் கண்காணிப்புத் துறை ஐஜி சந்தோஷ் குமரர் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம். சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜி ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத் துறை ஐஜியாக பணியிடமாற்றம், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி சத்யப்ரியா காவலர் நலன்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் நலன்பிரிவு டிஐஜி எம்.துரை காவல் துறை தலைமையக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.