6-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

திருவள்ளூர் அருகே விடுதியில் சேர்த்து விடுவதாக பெற்றோர்கள் கூறியதால் மன உளைச்சலில்  இருந்து வந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

suicide

திருவள்ளுர் மாவட்டம் பூண்டி அடுத்த நயப்பாக்கம் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளிகள் மணிகண்டன்- கவிதா. இவரது மகள் பவித்ரா (வயது 13), அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பு செல்ல கோடை விடுமுறையில் தனது வீட்டில் இருந்து வந்தார். பவித்ரா வீட்டு வேலை செய்யாமல் எந்த நேரம் தனது சக தோழிகளுடன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அவர் வீட்டிற்கு கூலி வேலை சென்று வீடு திரும்பிய தாயும், தந்தையும் மகள் பவித்ராவை அடுப்பு எரிய வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் பவித்ரா பெற்றோர் சொல்லியும் கேட்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பவித்ராவிடம் ‘உன்னை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தால் தான் நீ சரி படவ’ எனக் கூறி மிரட்டியுள்ளனர். 


இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பவித்ரா உடைய தங்கை மாதவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது அக்காள் மின்விசிறிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அழுது கூச்சலிட்டுள்ளார்.அக்கம் பக்கத்தினர் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்ட அவருடைய சடலத்தை இறக்கி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம்  தொடர்பாக பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.