மதுரை ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' இன்று திறப்பு

 
tn

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் ரூ. 66 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு  அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். 

jalli

பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு.  மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.  இருப்பினும் பார்வையாளர்கள் முறையாக அமர்ந்து போட்டி ரசிக்கும் வகையில் வசதிகள் இன்னும் ஏற்படுத்தி தரவில்லை.  இதன் காரணமாக கடந்த 2022ல் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

tn

 66 ஏக்கரில் ரூ.64 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் தற்போது கட்டப்பட்டுள்ளது.  கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்கிறார்.  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 3669 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில் 9312 காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இருப்பினும் 500 காளைகள்,  350 வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.  இதற்காக இன்று காலை தனி விமான மூலம் மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்துக்கு சென்று நிகழ்ச்சியில் பங்கே இருக்கிறார்.