11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் 60 வயது மூதாட்டி மீட்பு..!

 
1

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம் பெட்ராவதியில் நான்கு மாடி கொண்ட வீட்டின் மேல் தளத்தில் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சேறு, சகதியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை ஆயுதப் படைப் பிரிவினர் மீட்டு அவருக்குத் தண்ணீர் கொடுத்தனர். மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.