காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை பலி- அரசு மருத்துவமனையின் அலட்சியம்!

 
baby

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 6 மாதம் கை குழந்தைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால்  ஆறு மாத கைக்குழந்தை அரசு மருத்துவமனையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வந்தவாசி கோட்டைக்குள் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம்மூசா. இவருடைய  முகமதுரசூல் என்ற 6 மாத கைக்குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாட்களாக முன்பு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி அதிகமாக இருந்த காரணத்தால் பால் குடிக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் குழந்தைகளின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் அலட்சியமாக இருந்த காரணத்தால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் வளாகத்தின் உள்ளேயே தரையில்  அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.