தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
assembly

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாடு அரசு அவ்வபோது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில், 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக எஸ்.சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜன் இடமாற்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

நில நிர்வாக துறை ஆணையராக கே.எஸ்.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையராக ஜதக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் -2 துணை திட்ட இயக்குநராக செல்வராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.