#BREAKING ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!!

 
fisher

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.

fisher

தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரோக்யராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கரையூரை சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, அர்ஜூனன், தங்கப்பாண்டி, தங்கச்சிமடத்தை சேர்ந்த மடுகு பிச்சை, சிவகாமி நகரை சேர்ந்த ராஜா ஆகிய 6 பேர் கடலுக்கு சென்றுள்ளனர்.

arrest

கடலுக்கு சென்ற 6 பேரும்  கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை கைது செய்து ஒரு விசைப்படகை கைப்பற்றியது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு விசைப்படகுடன் ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்றதால் சக மீனவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.