தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..

 
 தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..


தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..

அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.  அதிலும் திமுக அரசு பொறுப்பேற்றட பிறகு  கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு  பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். அந்தவகையில் தற்போது  காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ.ஜி.பாபு , ஆனிவிஜயா உள்ளிட்ட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

அதன்படி,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த  ஏ.ஜி.பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேபோல்  காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா,  காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி-யாகவும்,   காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும்,   சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன்,  சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) மாற்றப்பட்டுள்ளார்.  அதேபோல்,  தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார்,  சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராகவும்,  குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன்,   திருப்பூர் மாநகர துணை ஆணையராகவும்  (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.