#BREAKING 56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

 
assembly

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு நாகை, திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை எஸ்பியாக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை எஸ்பியாக பூக்கிய சிநேக பிரியா நிமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் எஸ்பியாக குத்தாலிங்கம், திருவண்ணாமலை எஸ்பியாக ஏசி கார்த்திகேயன் நியமனம்

கடலூர் எஸ்பியாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக சாய் பிரனீத் நியமனம்

திண்டுக்கல் எஸ்பியாக ஜெயக்குமார், விழுப்புரம் எஸ்பியாக மதிவாணன் நியமனம்

விருதுநகர் எஸ்பியாக கவுதம் கோயல், தருமபுரி எஸ்பியாக அருண் கபிலன் நியமனம்

கிருஷ்ணகிரி எஸ்பியாக ஜி.அனிதா, நாமக்கல் எஸ்பியாக யாதவ் கிரீஷ் அசோக் ஆகியோர் நியமனம்

அரியலூர் எஸ்பியாக செல்வகுமார், திருப்பூர் எஸ்பியா சிரிஷ்டி சிங் நியமனம்

நாகை எஸ்பியாக கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, தேனி எஸ்பியாக கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் நியமனம்

க்யூ பிரிவு சிஐடி எஸ்பியாக அரவிந்த், மதுரை எஸ்பியாக தேவநாதன் நியமனம்