தமிழகத்தில் 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

 
govt

தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றங்களும் புதிய Posting-களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கட்டாயக் காத்திருப்பில் இருந்த டிஐஜி ஈ.எஸ். உமா சென்னை பெருநகர காவல் தலைமையக டிஐஜியாகவும், சேலம் எஸ்பியாக இருந்த கௌதம் கோயல் விருதுநகர் எஸ்பியாகவும், கடலூர் எஸ்பி எஸ். ஜெயக்குமார் திண்டுக்கல் எஸ்பியாகவும், திண்டுக்கல் எஸ்பி ஏ. பிரதீப் டிஜிபி அலுவலக சட்டம்-ஒழுங்கு உதவி ஐஜியாகவும் (AIG) மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், திருவள்ளூர் எஸ்பி விவேகானந்த சுக்லா கடலூருக்கும், விழுப்புரம் எஸ்பி வி.வி. சாய் பிரணீத் திருவள்ளூருக்கும், மதுரை எஸ்பி பி.கே. அரவிந்த் சென்னை க்யூ பிரிவு சிஐடிக்கும், கோயம்புத்தூர் மாநகர வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் என். தேவநாதன் மதுரை மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களின் முக்கிய சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர்களும் (DCP), அரியலூர், தேனி, திருநெல்வேலி, தர்மபுரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் எஸ்பிக்களும் பரவலாக இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்புகளில் உடனடியாக அமர்த்தப்பட்டுள்ளனர்.