45 வயது பெண்ணை காட்டுபகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை! தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை காட்டுபகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தெய்வ செயல்புரம் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நேற்று முன் தினம் பிற்பகல் தனது தோட்டத்திற்கு களை எடுப்பதற்காக வேலைக்கு சென்று விட்டு தனியாக திரும்பி வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனியாக நடந்து வந்த பெண்ணை தூக்கி சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தப் பெண் கூச்சலிட அருகில் தோட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டதுடன், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை பிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்க தவறிய காவல்துறை கண்டித்தும் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி முருகனை ஜாமினில் வெளிவர முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும், இது போன்ற பாலியல் சம்பவங்களை தடுக்க தவறிய காவல்துறை கண்டித்து தெய்வச் செயல் புரம் கிராமத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


