அடையாறு ஸ்பா ரிலாக்ஸாவில் இருந்து 4 பெண்கள் மீட்பு
Apr 23, 2021, 21:58 IST1619195337000
‘ஸ்பா ரிலாக்சா’என்ற பெயரில் சென்னை அடையாறு காமராஜர் அவென்யூ, 2வது தெருவில் இயங்கிவந்த செண்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கே பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
அங்கிருந்து 4 பெண்களையும் போலீசார் மீட்டனர். அப்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ரமேஷ்(வயது34) என்பவரை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட அப்பெண்களை நடத்திய விசாரணையில், ஸ்பாவில் வேலை தருகிறேன் என்று வரச்சொல்லி எங்களின் ஏழ்மையை பயன்படுத்தி இந்த தொழிலில் இழுத்துவிட்டுவிட்டார் என்று சொல்லி கண்ணீர் விட்டனர். இதையைத்து அவர்களை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைதான ரமேஷ் நீதிமன்ற காவலில் உள்ளார்.