4,000 துணை பேராசிரியர் பணியிடங்கள்.. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.. - அமைச்சர் க.பொன்முடி..

 
ponmudi

4,000 துணை பேராசிரியர் நியமனம்  தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும்,  இட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.  

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில்,  5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பொறியியல் கலந்தாய்வு 4-வது சுற்று வருகிற 14-ந்தேதி தான் நிறைவடைவதாக தெரிவித்தார்.  இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும்,  சென்ற ஆண்டு 80,383 பேர் சேர்ந்திருந்ததாகவும் கூறினார்.  இந்த ஆண்டு 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருப்பதாகவும், . 4-வது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளதாகவும் தெரிவித்தார்.  

4,000 துணை பேராசிரியர் பணியிடங்கள்..  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..  - அமைச்சர் க.பொன்முடி..

அதன் பின்னர், காலியிடங்களுக்கு துணை கலந்தாய்வு   நடைபெறும் என்றும்,  இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.  மேலும், கல்லூரி ஆசிரியர்கள் 4000 பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும் என்றார்.  சிறப்பு விரிவுரையாளர் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

4,000 துணை பேராசிரியர் பணியிடங்கள்..  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..  - அமைச்சர் க.பொன்முடி..

கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு  தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்,  3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  விரும்பும் இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்,  சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்..