அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

 
இத்தோட நிறுத்திக்கோங்க.. இல்லைனா நாங்களும்.. - ஜெயக்குமாரை எச்சரித்த அமர்பிரசாத் ரெட்டி..

தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி போலீசார் கானத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். இதனையடுத்து, சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், JCB இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுக-வின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார்  சம்பந்தப்பட்டு கூறியதால் , அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். 

இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு மனு அளித்தும் மனு குறித்து பதிலளக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.