வெடித்து சிதறிய கல்குவாரி - 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின. வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். 2 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
CCTV #video footage of #explosion near #quarry in #Virudhunagar district. @THChennai https://t.co/JKsPRxBtr6 pic.twitter.com/JwxYCr24ri
— Sundar Subbiah (@SundarSubbiah) May 1, 2024
சம்பவ இடத்தில் வெடிமருந்துகள் இருப்பதால் அந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர், போலீசார் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி, 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.


