ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை! ஸ்ரீரங்கத்தில் அதிர்ச்சி

 
s s

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

ச்

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமாக பஞ்சகரை பகுதியில் யாத்ரி நிவாஸ் என்கிற பெயரில் தங்கம் விடுதி செயல்படுகிறது. வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் தங்கி செல்ல வசதியாக அது செயல்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த சாமிநாதன்(67), அவரது மனைவி செண்பகவல்லி(65) மற்றும் மகள்கள் பவானி(47), ஜீவா(32) ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை யாத்திரி நிவாஸில் 710 வது அறையில் தங்க முன்பதிவு செய்திருந்தனர். 14 ஆம் தேதி அன்று மேலும் இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்டு தங்கி உள்ளனர். இந்த நிலையில் 19 ஆம் தேதியான நிலையில் அவர்கள் அறையை காலி செய்யாததால் இது குறித்து கேட்கஇன்று யாத்ரி நிவாஸ் பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே அருகில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைத்து பார்த்த பொழுது சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.ஸ்ரீரங்கம் போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில் பவானி(42), ஜீவா(37) இருவரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் இந்த நிலையில் தங்களுக்கு வயது மூப்பு ஆகிய நிலையில் தங்களுக்கு பின்னால் தங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நான்கு பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.