கிரேன் விபத்து: உயிரிழப்பு 4 ஆக உயர்வு

 
tn

ராணிப்பேட்டை அருகே மண்டியம்மன் என்கிற திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 

tn

ராணிப்பேட்டை நெமிலி தாலுக்கா கீழ் வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று  மயிலார் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் தொங்கியவாறு அம்மனுக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிரேனில்  ஒரே நேரத்தில் 8க்கும்  மேற்பட்ட பக்தர்கள் தொங்கியபடி சென்றனர். அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனை பள்ளமான இடத்தில் நிறுத்தி இருந்த நிலையில்,  எதிர்பாராதவிதமாக கிரேன் திடீரென சாய்ந்து கூட்டத்தில் இருந்தவர்களின் மீது விழுந்தது.  இதில் அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனில்  தொங்கியபடி சென்ற கீழ்ஆவதும் பகுதியை சேர்ந்த ஜோதிபாபு , கூட்டத்தில்  நின்றிருந்த முத்துக்குமார் , பூபாலன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 8ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Death

இந்நிலையில் நெமிலி அருகே கீழ் வீதி கிராம திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் பெரப்பேரி காலனியை  சேர்ந்த சின்னசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.