கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - கிரேன் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 
tn

கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

tn

ராணிப்பேட்டை நெமிலி தாலுக்கா கீழ் வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று  முன்தினம் மயிலார் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் தொங்கியவாறு அம்மனுக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிரேனில்  ஒரே நேரத்தில் 8க்கும்  மேற்பட்ட பக்தர்கள் தொங்கியபடி சென்றனர். அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேன்  பள்ளமான இடத்தில் நிறுத்தி இருந்த நிலையில்,  எதிர்பாராதவிதமாக கிரேன் திடீரென சாய்ந்து கூட்டத்தில் இருந்தவர்களின் மீது விழுந்தது.

police

 இதில் அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனில்  தொங்கியபடி சென்ற கீழ்ஆவதும் பகுதியை சேர்ந்த ஜோதிபாபு , கூட்டத்தில்  நின்றிருந்த முத்துக்குமார் , பூபாலன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பெரப்பேரி காலனியை  சேர்ந்த சின்னசாமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் 8ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுக்குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை, அரக்கோணம் அருகே ஏற்பட்ட கிரேன் விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  பணப்பாக்கத்தை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.