3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றாலும் வங்கிகளுக்கு லாபம்தான்! இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு?

 

3 மாதம் இ.எம்.ஐ கட்டவில்லை என்றாலும் வங்கிகளுக்கு லாபம்தான்! இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு?

கடன் தவணைகளைச் செலுத்த 3 மாத அவகாசம் அளிக்க ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியால் வங்கிகளுக்கே லாபம் அதிகம் என நிதிச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடன் தவணைகளைச் செலுத்த 3 மாத அவகாசம் அளிக்க ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியால் வங்கிகளுக்கே லாபம் அதிகம் என நிதிச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க தொழிற்சாலைகள், அலுவலகங்களை ஏப்ரல் 14 வரை மூட உத்தரவிடப்பட்டதால், மக்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். வேலை பாதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படுவதைக் கருதி கடன்களுக்கான மாதத் தவணைகளை வங்கிகள் 3 மாதங்கள் ஒத்தி வைக்க ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி அளித்தது. அதையடுத்து, வங்கிகளும் அந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தெரிவித்து வருகின்றன.

Money

ஆனால், நிதி நெருக்கடியில் இருப்போர் தவிர்த்து, வழக்கமான வருமானம் கிடைத்தவர்கள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தாமல் இருப்பதுதான் வாடிக்கையாளர்களுக்கு நல்லது என்று நிதிச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த தவணை ஒத்திவைப்பால், மூன்று மாதங்களுக்கான கடன் அசல் மீதான வட்டியை வங்கிகள் அசலுடன் இணைத்து விடும். இதனால், இஎம்ஐ எனப்படும் மாதத் தவணையின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

மேலும், வழக்கமான தவணை செலுத்தப்பட்டால், அசலும் ஓரளவு குறைந்து அதற்கான வட்டி அடுத்தடுத்த மாதங்களில் குறைய வாய்ப்புண்டு. ஆனால், 3 மாதங்களுக்கு தவணை செலுத்ததாதால், அசல் மீது மாதத்துக்கு ஒரே அளவான வட்டி சேர்க்கப்பட்டு, அடுத்தடுத்த தவணைகளை அதிகரி்த்தோ அல்லது தவணை செலுத்தும் காலத்தை நீட்டித்தோ வங்கிகள் வசூலிக்க உள்ளன. இதனால், 3 தவணைகளை ஒத்திவைப்பவர்களுக்கு கூடுதலாக 5 தவணைகள் கூட செலுத்த நேரிடும் என்றும், கூடுதல் வட்டி செலுத்துவார்கள் என்றும் நிதிச்சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், வருவாயின்றி தவிப்போர் நெருக்கடியில் இருந்து மீளலாம் என்றாலும், அவர்களால் வங்கிகளுக்கு அதிக வட்டி லாபம் கிடைக்கும் என்பதுதான் உண்மை என்கிறார்கள் நிபுணர்கள். எனவே, தவணையை செலுத்தும் அளவு வருவாய் இருப்பவர்கள் ஒத்திவைப்பு சலுகையை ஏற்காமல், மாதத் தவணையை தொடர்ந்து செலுத்துவதே லாபகரமானது.