மதுரையில் பரபரப்பு! 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

 
கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு! கொடூரமாக தாக்கும் புதிய வகை டெங்கு… இந்த அறிகுறிகள் இருந்தா உடனே ஹாஸ்பிட்டல் போங்க – எச்சரிக்கும் மத்திய அரசு!

மதுரையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 66 பேர் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்சாரம் பாய்ந்ததில் 5  நோயாளிகள் உயிரிழந்தனர்

வடகிழக்கு பருவமழை காரணமாக  பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மதுரையில் 66 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 36 குழந்தைகள், 30 பெரியோர்கள் என மொத்தம் 66 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவருக்கும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவருக்கும் டெங்கு பாதிக்கப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோயம்புத்தூரை சேர்ந்த 25 பெண் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் உள்ளன.