அதிர்ச்சி சம்பவம்! விழுப்புரம் அருகே கள்ளச்சாரயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு!

 
dead

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாரயம் குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்துள்ளது. அமரன் என்பவர் அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் அவனிடம் நேற்று கள்ளச்சாரயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 16 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துமனைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.