மகளுடன் சேர்ந்து விபச்சாரம் நடத்திய கொடூர தாய்; போலீஸ் உட்பட 3 பேர் கைது
மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்திய போலீஸ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் கோ .புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது இரு பெண் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கு உள்ளது தெரியவந்தது
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து அங்கு வாடகை வீட்டை பிடித்து பாலியல் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இவருக்கு உடந்தையாக இருந்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(49) மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காசி(42) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்
பெண்களிடம் நடத்தி விசாரணையில் சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து பாலியல் தொழில் செய்து வந்ததும், அதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுனர் காசி செயல்பட்டதும் தெரியவந்தது. தலைமை காவலர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணில் ஒருவர் கைது செய்யப்பட்ட சுமதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.