யூடியூபரை மிரட்டிய விவகாரத்தில் 3 பேர் கைது
Jul 8, 2024, 12:05 IST1720420556772
சென்னை ரிச்சி தெருவில் யூடியூபரை மிரட்டிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல யூடியூபர் A2D நந்தகுமாரிடம் மதுபோதையில் தகராறு செய்து கேமராவை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர் எலெக்ட்ரானிக் பொருள் வாங்கச் சென்றபோது நடந்த சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தது வைரலானதைத் தொடந்து ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகியோரை கைது செய்தனர்.
ரிச்சி தெருவில் நடந்து சென்ற யூடியூபரை வழிமறித்து மிரட்டியதாக அளித்த புகாரில் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பார்த்திபன், கிஷோர் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.