திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி.. எப்போ தெரியுமா??

 
book


திருவள்ளூர் மாவட்டத்தில்  2வது புத்தகக் கண்காட்சி வருகிற 17ம் தேதி தொடங்க  உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ திருவள்ளுர் மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முதலாவது புத்தக கண்காட்சி -2022-ல் திருவள்ளூரில் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உடன் இணைந்து 17.03.2023 முதல் 27.03.2023 வரை 11 நாட்கள் ஆவடி HVF மைதானத்தில் நாள்தோறும் காலை 11.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

books

இந்த கண்காட்சியில் 100 அரங்குகளில் 10,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூபாய் 10 முதல் ரூபாய் 1000 வரை மதிப்பிலான புத்தகங்கள் ஒரே   கூரையின்கீழ் குவிக்கப்பட உள்ளது.  இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்து வழங்கப்பட உள்ளது. நாள்தோறும் இக்கண்காட்சியில் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை  பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.