ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

 

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய  சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில் தகுதியை தீர்மானிக்க ’ஒரே தேர்வு முறை’ என்பது சமூக நீதிக்கு எதிரானது என்கிறார் நடிகர் சூர்யா.

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய  சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

மேலும் அவர் தனது அறிக்கையில், ’’ எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் முறையை 40 சதவிகிதம் மற்றும் 25 சதவிகிதம் மாணவர்களில் 20 சதவிகிதம் மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.

நீட் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது.

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய  சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை. தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்கள் தலைமையிலான குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும் படி கேட்டிருக்கிறது .

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் இணைந்து பயணிக்கின்ற அகரம் பவுண்டேசன் மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும். மாணவர்களும் அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களை தவறாமல் நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம், neetimapact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு ,கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தரத் தீர்வு.

’ கல்வி மாநில உரிமை’ என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.